முதலாம் தகடூர்ப் போரில் சேரமான் பெருஞ்சேரலிரும் பொறையோடு போரிட்டு அதியமான் நெடுமான் அஞ்சி வீர மரணம் எய்தினான். அதன் பின்னர் அதியமானின் மகன் "பொகுட் டெழினி" ஆட்சிபீடம் ஏறினான். அரசன் பொகுட் டெழினியின் ஆட்சியில் படைமுதல்வனாக - படைத்தளபதியாக - அஞ்சா நெஞ்சம் கொண்ட போர்படைச் சிங்கமாக இருந்தவர் "பெரும்பாக்கன்" ஆவான்.
"அதியமானால் சிறப்பெய்திய பெரும்பாக்கன்" என்று நாச்சினார்க்கினியர்கூருவதினின்று நோக்கும் போது அதியமானின் போர்ப்படையில் பெரும்பாக்கன் களம் பல கண்ட வேங்கையாக இருந்திருக்க கூடும். அதியமானால் படைக்கல்வி பயிற்றுவிக்கப்பட்டவன். அதியமானால் போர்வியூகங்கள் அறிந்தவனாக உருவானவன், அதியமானிடம் போர்வீரனுக்குரிய அனைத்துச் சன்மானங்களைப் பெற்றவன். அதியமானிடம் அனைத்து உதவிகளை அரசு முறையில் "தண்டை"ப் பெற்றவன். அதியமானின் மகோன்னதமான காலத்தில் பெரும்பாக்கன் தகடூரின் சிங்கமாக உருவானான், உருவாக்கப்பட்டான்.
தகடூர் வரலாற்றில் தகடூரின் எழுச்சியின் இமயமாக அதியமான் விளங்குகிறான், தகடூரின் வீழ்ச்சியில் எழுச்சியின் இடிமேகமாக வெளிக்கிளம்பி தகடூர் மண்ணை காக்கப்போரிட்ட மாவீரன் பெரும்பாக்கன் என்பது தகடூரின் மாபெரும் வரலாறாகும்.
புறநானூறு, அகநானூறு, சங்கப்பாடலில் பெரும்பாக்கனை பற்றி வரலாற்று சான்று இல்லை. தகடூர் யாத்திரையில் தகடூர் கோட்டை முற்றுகை போரில் வீர இளைஞனை வருணிக்கும் பாடலுக்கு விளக்கமளிக்கும் போது தொல்காப்பிய உரையாசிரியர் நாச்சினார்க்கினியர் அதியமானால் சிறப்பெய்திய பெரும்பாக்கன் என்று குறிப்பிடுவதிலிருந்தே நமக்கு பெரும்பாக்கனை தெரிகிறது. பாடல்களில் பெரும்பாக்கன் என்ற சொல் இல்லை. தொல்காப்பியம் புறத்திணையியலுக்கு உரை எழுதியவர் ஆசிரியர் பாரத்துவாசி நாச்சினார்க்கினியர்தான் பெரும்பாக்கன் பெயரையும் மாவீரன் நெடுங்கோளன் பெயரையும் குறிக்கின்றனர். அவருக்கு மட்டுமே தகடூர் போர்நிலைக் குறிப்புகள் தெரிந்திருக்கிறது. அவர் தொல்காப்பிய புறத்திணையியல் 63 ஆம் பாடலில் "பொருளின் றுய்த்த பேராண் பக்கமும்" என்ற வரிக்கு "பகை வேந்தரை ஒரு பொருளாக மதியாது படையினைச் செலுத்தின பேராண்மை செய்யும் பகுதியும்" என்று பொருளாகும். இந்த வரிக்கு இலக்கணமாக- உதாரணமாக தகடூர்ப் பெரும்பாக்கனையே எடுத்துக்காட்டாகக் கொள்கிறார். உரையாசிரியர் கூற்றுப்படி பெரும்பாக்கன் படையை வழி நடத்தினவன் என்றாகிறது.
பெரும்பாக்கனின் ஆணழகு பெருவீரத்தன்மையை சேரப்புலவர் ஆசிரியர் அரிசில்கிழார் தகடூர் யாத்திரையில் பாடலாக இசைத்துள்ளார்.
"மெய்ம்மலி மனத்தி னம்மெதிர் நின்றோ
னடர்வினைப் பொலிந்த சுடர்விடு பாண்டிற்
கையிகந் தமருந் தையணற் புரவித்
தளையவிழ் கண்ணி யிளையோன் சீறின்
விண்ணுயர் நெடுவரை வீழ்புயல் கடுப்பத்
தண்ணுறுங் கடாஅ முமிழ்ந்த வெண்கோட்
டண்ணல் யானை யெறித லொன்றோ
மெய்ம்மலி யுவகைய னம்மருங்கு வருதல்
கடியமை கள்ளுண் கைவல் காட்சி
துடிய னுண்க நோக்கிச் சிறிய
கொலைமொழி மின்னுச்சிதர்ந் தனையந்
வேறரித் திட்டு நகுதலு நகுமே"
- புலவர் அரிசில்கிழார் (தகடூர் யாத்திரை)
"இதிலிருந்து அதிகமானாற் சிறப்பெய்திய பெரும்பாக்கனை மதியாது சேரமான் முனைப்படை நின்றானைக்கண்டு அரிசில்கிழார் கூறியது" என்று நாச்சினார்க்கினியர் கூறுவதினின்றே 'பெரும்பாக்கனை" என்ற பெயரை அறிகிறோம். தகடூர் பெரும்பாக்கன் வரலாற்றை நமக்கு தந்தவர் நாச்சினார்க்கினியரே ஆகும்.
மேற்கண்ட பாடலில் புலவர் ஆசிரியர் அரிசில்கிழார் தன்னுடைய சேரமன்னன் சேரமான் பெருஞ்சேரலிரும் பொறைக்கு படைமுதல்வன் பெரும்பாக்கனைப்பற்றி கூறும் பாடலின் பொருளுரை இதோ;-
சேரமானே.!
நம் எதிரே நிற்கும் வாய்மை கொண்ட இளைஞன் இளமைப் பொலிவால் வீறுகொண்டவன்; ஒளிவிடும் தேரினை உடையவன்; வீரமிக்க எழில்மிக்க குதிரையுடையவன் அழகிய மாலையை அணிந்த இளையோன் சீறினால் உயரமான மலைச்சிகரத்தினின்று வீழ்கின்ற மழைநீர்போல் குளிர்ச்சிப் பொருந்திய மதநீரைப்பொழியும் வெண்தந்தங்களுடைய களிற்று யானையை கொள்ளுவது இயலாதோ? போர் என்னும் அச்சமேயன்றி மகிழ்ச்சிபொங்க நம்முன்னே வரும் வீரமறவன் கையில்வேல் தாங்கி நமது போர்முரசு கொட்டும் துடியனை பிறழ்ந்து நோக்கி தம்மை அலட்சியம் செய்துபோர் முகமாய் சிரிப்பாய் சிரிக்கும் இளைஞனை காண்!
மேலும் தொல்காப்பிய புறத்திணையியல் 63 ஆம் பாடல் உரைக்குறிப்பில்,
"வரு விசைப் புனலைக் கற்சிறை போல ஒருவன் தாங்கிய பெருமையானும்"
என்பதற்கு பொருள்: தன்படை நிலையாற்றாது பெயர்ந்தவழி விசையோடு வரும் பெருநீரைக் கல்லணை தாங்கனாற் போலத்தன் மேல்வரும் படையினைத்தானே தடுத்த பெருமையும் என்பதற்கு உதாரணமாக,
"கார்த்தரும் புள்ளனற் கண்ணஞசாக் காளைதன்
றார்ப்பற்றி யேர்தரு தோனோக்கித்- தார்ப்பின்னர்
ஞாட்பினுள் யானைக் கணநோக்கி யானைப்பின்
றோர்க்குழா நோக்கித்தன் மாநோக்கிக் - கூர்த்த
கணைவரவு நோக்கித்தன் வேனோக்கிப் பின்னைக்
கிணைவனை நோக்கி நகும்"
- புலவர் பொன்முடியார் (தகடூர் யாத்திரை)
என வரும் இது பொன்முடியார் ஆங்கவனைக்(பெரும்பாக்கன்) கண்டு கூறியது என்று தொல்காப்பிய உரையில் நாச்சினார்க்கினியர் குறிக்கின்றார்.
போர்க்களத்தில் பகைவனின் வேல்வீச்சுக்கு கண்சிமிட்டாத - கண் அஞ்சாத காளையாம் பெரும்பாக்கன் போர் யானையை நோக்கி யானைப்பின்னே இருக்கும் தேர்க்குழாம் படையை நோக்கி, தன்னுடைய போர்க்குதிரையை நோக்கி கூரிய எதிரியின் வேல் போர்க்களத்தில் எத்திக்கிலிருந்து தன்னை நோக்கி வரும் என நோக்கி, தன் கைவேலை நோக்கி பின் எதிர்க்கும் மன்னவனை நோக்கி சிரிக்கின்றான் துச்சமாக.
புறநானூற்றில் நமது புலவர் ஒளவையாரால் ஏற்றிப் போற்றி விண்ணளாவிப் புகழ்ந்து பெரும் புயலென வீரம் கொண்ட அதியமானை நமக்குக் காட்டப்படுகிறது. அப்படிப்பட்ட அதியமானின் இறுதிக் காலம் குற்றத்தன்மையுடையதாகி விட்டது. சேரமான் பெருஞ்சேரலிரும்பொறை படையெடுத்து வந்து இன்றைய அதியமான் கோட்டை முற்றுகையிட்ட நேரத்தில் பேராண்மைச் சிங்கமாக தகடூர் கோட்டையைவிட்டு வெளியே வந்து சேரமானை நேருக்கு நேர் போர்க்களத்தில் சந்தித்து போரிட்டு தகடூர் கோட்டையை காத்திருக்க வேண்டும், இல்லையென்றால் கோட்டை வெளிப்போரில் மாண்டிருக்க வேண்டும். அதுவே தகடூர் அதியமானின் மாண்புடைய வீர வாழ்வாக முடிந்திருக்க வேண்டும். அனால் இதற்கு மாறாக எதிரி படையோடு கோட்டைக்கு வெளியே வந்து தகடூர் கோட்டையை - நாட்டை கைப்பற்ற எக்காளமிட்டு கொக்கரித்து நிற்கும்போது எதிரியை போர்முகத்தில் சந்திக்காது, கோட்டையை விட்டு பேராண்மை சிங்கமாக ஒளி ஞாயிறன வெளியே வராமல் கோட்டைக்குள்ளே அதியமான் முடங்கிகிடந்தான் என்பது தகடூரின் மாபெரும் வீழ்ச்சியாகும். இது அதியனின் போர்க்குற்றத்தன்மையாகும்.
ஆனால் இரண்டாம் தகடூர்ப்போரில் மன்னன் பொகுட் டெழினிக்கும் சேரமான் பெருஞ்சேரலிரும்பொறைக்கும் நடந்த போரில் பொகுட் டெழினியின் போர்க்கள வீரதீரச்செயலை நாம் காண எந்த அகச்சான்றும் புறச்சான்றும் இல்லை, போரில் மாண்ட பொகுட் டெழினியின் அருமையை - பெருமையை எண்ணி எண்ணி சேரமானின் புலவர் அரிசில்கிழார் துக்கித்து இறங்கற்ப் பாடியுள்ளார் என்பது அறியக்கிடக்கிறது.
இரண்டாம் போரில் தகடூர் கோட்டையை விட்டு ஒளி ஞாயிறென - பேராண்மை சிங்கமாக - கோட்டையிடியென - சீறும் வரிப்புலியாய் - பாயும் தகடூர் வேங்கையாய் - பொகுட் டெழினியின் படை முதல்வன் பெரும்பாக்கன் மழவர் படையோடு புயலென வெளிக்கிளம்பி வந்து காவற்காட்டில் சேரமான் படையை எதிர் கொண்டான்; சேரமான் பெருஞ்சேரலிரும்பொறையை நேருக்கு நேர் தகடூர் கோட்டை வெளிப்போரில் சந்தித்தவன் பெரும்பாக்கன்.
இளைஞனாய் - களிற்று யானையையும் வீழ்த்தும் ஆற்றலுடையவனாய் வீரமாமுகத்தோடு சேரமானை ஒரு பொருளாக மதிக்காது துச்சமாக புன்னகை புரிந்தான். போர் முழக்கமிட்டான், அதியமானால் பொகுட் டெழினியால் , ஏற்பட்ட தகடூர் வீழ்ச்சிஎனும் பேரிருளில் ஓர் பேரொளியாய் படைமுதல்வன் பெரும்பாக்கன் களத்தில் சேரமானை எதிர்த்து போரிட்டான். தகடூர் தாயகத்திற்காக வீரமரணம் எய்தினான்.
தகடூர் போர்களில் களத்தில் சேரமானோடு உடன்வந்து போர்க்கள கட்சிகளை நேரில் கண்ட புலவர் ஆசிரியர் அர்சில்கிழாரும் புலவர் பொன்முடியாரும் தகடூர் கோட்டை அரண்சிறப்பையும் தகடூர் பெரும்பாக்கன் மற்றும் அவரது மழவர் படை விளைவித்த உலகமகா வீரத்தையும் கண்டு மெச்சி அவர்களை பற்றிப் பாடல்கள் புனைந்தனர். தகடூர் யாத்திரை பாடலில் தளபதி பெரும்பாக்கனைப் பற்றி பாடியவர்கள் அரிசில்கிழாரும் பொன்முடியாரும் ஆகும். ஆனால் சேர மரபினரின் வீரமாண்பை தெரிவிக்கும் புறப்பாடலான பதிற்றுப்பத்தில் புலவர் ஆசிரியர் அரிசில்கிழார் தகடூர் நாட்டின் வளத்தையும் தகடூர் நாட்டின் மழவர்களை -மறவர்களை - வெல்போர் ஆடவர்களை மட்டுமே குறித்துப்பாடல் புனைதுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
"வெல்போ ராடவர் மறம்புரிந்து காக்கும்
வில்பயி விறும்பிற் றகடூர் நூறி"
- அரிசில்கிழார் (பதிற்றுப்பத்து)
பதிற்றுப்பத்தில் "வெல் போராடவர் மறம்" நம்முள்ளத்தில் இரத்தத்தில் தகடூரின் வீரப்பேருனர்ச்சிக் கனலாய் எழுந்து விண்ணளாவி நிற்பதை நாம் உணர்கிறோம். தகடூரின் வெல்போராடவர்களை பெரும்பாக்கானே மாபெரும் தகடூரின் போர்சிங்கமானவான் என்பது வரலாறாகும். தகடூர் வெல்போராடவர்களை வழிநடத்தியவன் , தகடூர் கோட்டையை விட்டு அகழியைத் தாண்டி காவற்காட்டில் தன் படை மழவர்களோடு வெல்போராடவர்களோடு சேரமானை நேருக்கு நேர் சந்தித்த தகடூரின் பேராண்மை பெரும்பாக்கன் ஆவான்.
"அதோ கருந்தாடியுடைய அந்த அஞ்சா நெஞ்சன் தன் கையில் உள்ள வேலையும் நம்மையும் பார்த்து இறுமாப்புடன் சிரிக்கின்றான்"
- அரிசில்கிழார்.
'அந்த வீர இளைஞனால் வீறுமிக்க யானைகளைக்கூட வீழ்த்த முடியும் என்று தோன்றுகிறது".
- புலவர் பொன்முடியார்.
இதோடல்லாமல் வேறு சில புத்தங்களில் பெரும்பாக்கனை பற்றி புகழ்ந்துள்ளர்கள்.
தென்னாட்டு போர்கள் - பன்மொழி புலவர் க. அப்பா துரையார்
தருமபுரி வரலாறும் பிரகலாத சரித்திரமும் - ச. கிருஷ்ணமூர்த்தி
அதியமான் நெடுமான் அஞ்சி - ஜே. குலசேகரன் கவுண்டர்.
எரி அன்பு - தகடூரான் (எ) K.C. கிருஷ்ணன் கவுண்டர்
இந்த புத்தகங்களில் மேலும் விரிவாக மழவர் படைத் தலைவன் பெரும்பாக்கன் பற்றி அறியலாம்.
பாண்டியர்களின் படைத்தலைவன் - பழையன் மாறன்
சேரர்களின் படைத்தலைவன் - நன்னன், ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி, புன்றுறை
இவர்களை எல்லாம் ஒரு சேர எதிர்த்து போரிட்டு அழித்தான், தானும் போர்க்களத்தில் மாண்டான் மோகூர் பழையன்.
நன்னன் என்னும் மன்னனின் படைத்தலைவன் ஞிமிலியாவான், சேர படைத்தலைவன் கணையன் என்பவன் ஒருவன் இருந்தான். 12 ஆம் நூற்றாண்டு காலத்தில் ராஜராஜ சோழனோடு இலங்கை படையெடுப்பின் போது வீர வன்னிய படைத்தலைவர்கள் உடன் சென்று இலங்கையை வென்று கிழக்கு இலங்கையை தங்களின் வன்னிமைகளின் ஆட்சிபிரதேசமாக கொண்டார்கள். இலங்கையில் வெள்ளையரின் குடியேற்ற ஆட்சியாதிக்கதை எதிர்த்தவன் கடைசி இலங்கை தமிழ் மன்னன் குலசேகர வைரமுத்து என்னும் இயற்பெயர் கொண்ட பண்டார வன்னியன் ஆவான். இவர் வன்னியர் படைத்தலைவர்கள் மரபில் உதித்தவன் ஆவான்.
முதற் குலோத்தங்க சோழன் காலத்தில் ஒரிசா வடலிங்கம்வரை படையெடுத்துச் சென்று வாகை சூடியவன் ஆவான். உலகபுகழ் கலிங்கத்துப் பரணி கதாநாயகன் படைமுதல்வன் கருணாகர தொண்டைமான் ஆவான். இங்ஙனம் தமிழகத்தின் போர்ப்படைதலைவர்களின் வரலாற்றுக்கெல்லாம் அடிப்படையாகவும் எழுச்சியாகவும் இருப்பவன் தகடூர் நாட்டின் படைத்தலைவன் வன்னியமழவர் பெரும்பாக்கன் என்பது வரலாறாகும்.
- பெரும்பாக்கன்
அதகபாடி = அதிகமன்+பாடி.
அதகபாடி ஊராட்சி தலைமியிடம். இந்த ஊராட்சியின் தலைவராக இருந்தவர் “பெரியமாக்கன்”. இவருடைய பெயர் தகடூர் அதியமான் அஞ்சியின் மகன் பொகுட்டெழினி ஆட்சிக்காலத்து படை முதல்வனும், 2-ஆம் தகடூர் போரில் சேரமான் பெருஞ்சேரலிரும்பொறையை அதியமான் கோட்டை முன் காவற்காட்டில் நேருக்குநேர் எதிர்த்த மழவர் தடூர் சிங்கம் பெரியமாக்கன் பெயரே ஆகும்.
தகடூர் படைமுதல்வன் பெரும்மாக்கன் பிறந்த பழங்கால ஊரே அதகபாடி. பெரும்மாக்கன் வம்சாவளியிர் இன்று பெயர் மருவி “பெரிய மாக்கன் வீட்டார்” என்று அழைக்கின்றனர். மேலும் அதியமான் பாடி கிராமத்தில் பெரியமாக்கன் வம்சாவளியை – பரம்பரையை “மாக்கம் வீட்டார்’ என்று மரபு வழியாக அழைக்கபடுகிறது.
பெரிய மாக்கன் வீட்டாரில் பிறக்கும் முதல் ஆண் குழந்தைக்கு பெரிய மாக்கன் என்றும் முறையே இரண்டாவது குழைந்தைக்கு சின்ன மாக்கன் என்றும், பெண் குழந்தைகளுக்கு மாக்கி என்றும் பெயர் சூட்டுவது வழக்கமாக இருந்து வருகிறது. பெரிய மாக்க வீட்டாரே பழங்காலத் தகடூரின் படைத்தலைவன் பெரும்மாக்கன் பிறந்த வீடாகும்.
பெரியமாக்கன் குடும்பத்திற்கு அதிகமான உறவுமுறைகள் இருப்பது இந்த "மாக்கனூர்" கிராமம் (மழவர்கள்) என்பது குறிப்பிடத்தக்கது.
01.09.2015 - ல் வந்த தினமலர் நாளிதழில் மாக்கனூர் கிராமத்தின் வரலாற்றை தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்.
தருமபுரியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த கிராமம். வீட்டிற்கு ஒன்று முதல் நான்கு ஆசிரியர்கள் உள்ளனர். கேட்பதற்கே ஆச்சிரியமாக உள்ளதல்லவா..
தகடூரை மண்ணை அப்போதைய மன்னன் அதியமான் ஆண்டபோது இம்மன்னனின் படையில் தளபதியாக இருந்தவர் பெருமாக்கன் இவர் இப்பகுதியில் தங்கியிருந்தார். இவர் பெயர் தான் நாளடைவில் மருவி மாக்கான் என்று அழைத்தும் பின் அது காலப்போக்கில் "மாக்கன் ஊர்" , மாக்கனூர் என்றழைக்கப்படுகிறது.
மேலும் சில தகவல்: https://www.facebook.com/darumapurimavattam/photos/a.632754576753082.1073741828.631117923583414/806844749344063/?type=1&theater
மேலும் இந்த கிராமத்தில் வீட்டுக்கொரு ஆசிரியர் உள்ளனர். தருமபுரி மாவட்டத்திலேயே "ஆசிரியர் கிராமம்" என்றழைக்கப்படுவது இந்த கிராமமே. திண்ணைப்பள்ளி முதல் நடுநிலைப்பள்ளி வரை என்ற தலைப்பில் கட்டுரை வந்துள்ளது அதை கீழே காண்க.!
Click Here: http://www.newindianexpress.com/states/tamil_nadu/With-100-Literacy-Makkanoor-Village-has-Teacher-in-Every-Home/2013/12/12/article1941158.ece
மேலும் சுமார் 1000 ஆண்டுகாளாக கடைபிடித்து வரும் ஊர் கவுண்டர், மந்திரி கவுண்டர் மற்றும் கோல்கார கவுண்டர் என நிர்வகிக்கும் முறையை இன்றும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர்.
Click Here: http://www.frontline.in/static/html/fl2811/stories/20110603281109500.htm
பாடி:-
அதகபாடி மற்றும் மாக்கனூர் கிராமத்தை தொடர்ந்து, அதியமான் படைமுதல்வன் பெரியமாக்கனின் அண்ணன், தம்பிகளும் மற்றும் சம்பந்திகளும் வாழும் கிராமம் தான் "பாடி".
மாபெரும் பெருந்தலைவர் குட்டிக்கவுண்டர் பிறந்த ஊர். இந்த ஊர் அதியமானின் மழவர் போர்ப்படையினர் தங்கியிருந்த ஊர். இந்த கிராமமும் அதிகமான்பாடி வீடுகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குட்டிக் கவுண்டரின் பேரன் தான் தருமபுரி மாவட்ட வன்னியர் சங்க தலைவரும் பாமக துணைத்தலைவருமான பாடி. செல்வம் ஆகும்.
பாலக்கோடு ஜெர்தலாவ் ஊராட்சிக்கு உட்பட்ட "மாக்கன் கொட்டாய்" என்ற ஊர் உள்ளது. இது போலவே இதே தாலுகாவில் சீரியன அள்ளிக்கு அருகேயும் மாக்கன் கொட்டாய் (எ) சீராண்ட புரம் என்ற ஊர் உள்ளது.
*************************************************************************
சங்ககாலத் தமிழ் புலவர்களில் பெரும்பாக்கனார் என்னும் புலவர் ஒருவர் இருந்தார். இவர் பெரும்பாக்கன் என்னும் ஊரை சேர்ந்தவராக இருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். பெரும்பாக்கன் என்ற பெயரில் ஊர்கள் தமிழகத்தில் இருக்கின்றன. செங்கல்பட்டு மாவட்டத்தில் "பெரும்பாக்கச்சீமை" என்பது ஒரு நாட்டுப்பகுதியாகும்.
"அம்ம வாழி தோழி புன்னை
அலங்குசினை யிருந்த அஞ்சிறை நாரை
உறுகழிச் சிறுமீன் முனையிற் செறுவிற்
கள்நாறு நெய்தல் கதிரோடு நயக்கும்
தண்ணத் துறைவற் காணின் முன்னின்று
கடிய கழறல் ஒம்புமதி தொடியோள்
இன்ன ளாகத் துறத்தல்
நும்மின் தகுமோ என்றனை துணிந்தே".
- புலவர் பெரும்பாக்கனார் (குறுந்தொகை - 296)
தோழி ஒன்று கூறுவன் கேட்பாயாக! புன்னை மரத்தினது அசைகின்ற கொம்பின்கண் இருந்த அழகியை சிறகுடைய நாரை மிக்க கழியிடத்தே சிறிய மீன்களை தின்று வெறுத்த தாயின் கழனிகளிடத்தே தேன்மணக்கும் நெயதற்பூவை நெற்கதிரோடே தின்ன விரும்புவதற்கு காரணமான குளிர்ந்த துறையுடைய தலைவனை அவன் கண்முன்னே நின்று துணிந்து வளையலையுடைய தலைவி இவ்வாறு ஆற்றாளுகும்படி அவளை பிரிந்து போதல் நுமக்கு தகுதியாகுமோ என்று இன்னோரன்ன கடிய சொற்களை கூறி இடித்துரைத்தலைப் பாதுகாப்பாயாக!
இப்பாடலை பாடிய புலவர் எங்கு வாழ்ந்தார் என்று தெரியவில்லை. அனால் மழவர் படைத்தலைவர் பெரும்பாக்கன் இல்லை. இவர்கள் இருவருமே வாழ்ந்துள்ளார்கள் என்று தெரிய வருகிறது.
*******************************XXXX*************************************
"அதியமானால் சிறப்பெய்திய பெரும்பாக்கன்" என்று நாச்சினார்க்கினியர்கூருவதினின்று நோக்கும் போது அதியமானின் போர்ப்படையில் பெரும்பாக்கன் களம் பல கண்ட வேங்கையாக இருந்திருக்க கூடும். அதியமானால் படைக்கல்வி பயிற்றுவிக்கப்பட்டவன். அதியமானால் போர்வியூகங்கள் அறிந்தவனாக உருவானவன், அதியமானிடம் போர்வீரனுக்குரிய அனைத்துச் சன்மானங்களைப் பெற்றவன். அதியமானிடம் அனைத்து உதவிகளை அரசு முறையில் "தண்டை"ப் பெற்றவன். அதியமானின் மகோன்னதமான காலத்தில் பெரும்பாக்கன் தகடூரின் சிங்கமாக உருவானான், உருவாக்கப்பட்டான்.
தகடூர் வரலாற்றில் தகடூரின் எழுச்சியின் இமயமாக அதியமான் விளங்குகிறான், தகடூரின் வீழ்ச்சியில் எழுச்சியின் இடிமேகமாக வெளிக்கிளம்பி தகடூர் மண்ணை காக்கப்போரிட்ட மாவீரன் பெரும்பாக்கன் என்பது தகடூரின் மாபெரும் வரலாறாகும்.
புறநானூறு, அகநானூறு, சங்கப்பாடலில் பெரும்பாக்கனை பற்றி வரலாற்று சான்று இல்லை. தகடூர் யாத்திரையில் தகடூர் கோட்டை முற்றுகை போரில் வீர இளைஞனை வருணிக்கும் பாடலுக்கு விளக்கமளிக்கும் போது தொல்காப்பிய உரையாசிரியர் நாச்சினார்க்கினியர் அதியமானால் சிறப்பெய்திய பெரும்பாக்கன் என்று குறிப்பிடுவதிலிருந்தே நமக்கு பெரும்பாக்கனை தெரிகிறது. பாடல்களில் பெரும்பாக்கன் என்ற சொல் இல்லை. தொல்காப்பியம் புறத்திணையியலுக்கு உரை எழுதியவர் ஆசிரியர் பாரத்துவாசி நாச்சினார்க்கினியர்தான் பெரும்பாக்கன் பெயரையும் மாவீரன் நெடுங்கோளன் பெயரையும் குறிக்கின்றனர். அவருக்கு மட்டுமே தகடூர் போர்நிலைக் குறிப்புகள் தெரிந்திருக்கிறது. அவர் தொல்காப்பிய புறத்திணையியல் 63 ஆம் பாடலில் "பொருளின் றுய்த்த பேராண் பக்கமும்" என்ற வரிக்கு "பகை வேந்தரை ஒரு பொருளாக மதியாது படையினைச் செலுத்தின பேராண்மை செய்யும் பகுதியும்" என்று பொருளாகும். இந்த வரிக்கு இலக்கணமாக- உதாரணமாக தகடூர்ப் பெரும்பாக்கனையே எடுத்துக்காட்டாகக் கொள்கிறார். உரையாசிரியர் கூற்றுப்படி பெரும்பாக்கன் படையை வழி நடத்தினவன் என்றாகிறது.
பெரும்பாக்கனின் ஆணழகு பெருவீரத்தன்மையை சேரப்புலவர் ஆசிரியர் அரிசில்கிழார் தகடூர் யாத்திரையில் பாடலாக இசைத்துள்ளார்.
நாச்சினார்க்கினியர் காட்டும் தகடூர் யாதிரைப்பாடல்:-
"மெய்ம்மலி மனத்தி னம்மெதிர் நின்றோ
னடர்வினைப் பொலிந்த சுடர்விடு பாண்டிற்
கையிகந் தமருந் தையணற் புரவித்
தளையவிழ் கண்ணி யிளையோன் சீறின்
விண்ணுயர் நெடுவரை வீழ்புயல் கடுப்பத்
தண்ணுறுங் கடாஅ முமிழ்ந்த வெண்கோட்
டண்ணல் யானை யெறித லொன்றோ
மெய்ம்மலி யுவகைய னம்மருங்கு வருதல்
கடியமை கள்ளுண் கைவல் காட்சி
துடிய னுண்க நோக்கிச் சிறிய
கொலைமொழி மின்னுச்சிதர்ந் தனையந்
வேறரித் திட்டு நகுதலு நகுமே"
- புலவர் அரிசில்கிழார் (தகடூர் யாத்திரை)
"இதிலிருந்து அதிகமானாற் சிறப்பெய்திய பெரும்பாக்கனை மதியாது சேரமான் முனைப்படை நின்றானைக்கண்டு அரிசில்கிழார் கூறியது" என்று நாச்சினார்க்கினியர் கூறுவதினின்றே 'பெரும்பாக்கனை" என்ற பெயரை அறிகிறோம். தகடூர் பெரும்பாக்கன் வரலாற்றை நமக்கு தந்தவர் நாச்சினார்க்கினியரே ஆகும்.
மேற்கண்ட பாடலில் புலவர் ஆசிரியர் அரிசில்கிழார் தன்னுடைய சேரமன்னன் சேரமான் பெருஞ்சேரலிரும் பொறைக்கு படைமுதல்வன் பெரும்பாக்கனைப்பற்றி கூறும் பாடலின் பொருளுரை இதோ;-
சேரமானே.!
நம் எதிரே நிற்கும் வாய்மை கொண்ட இளைஞன் இளமைப் பொலிவால் வீறுகொண்டவன்; ஒளிவிடும் தேரினை உடையவன்; வீரமிக்க எழில்மிக்க குதிரையுடையவன் அழகிய மாலையை அணிந்த இளையோன் சீறினால் உயரமான மலைச்சிகரத்தினின்று வீழ்கின்ற மழைநீர்போல் குளிர்ச்சிப் பொருந்திய மதநீரைப்பொழியும் வெண்தந்தங்களுடைய களிற்று யானையை கொள்ளுவது இயலாதோ? போர் என்னும் அச்சமேயன்றி மகிழ்ச்சிபொங்க நம்முன்னே வரும் வீரமறவன் கையில்வேல் தாங்கி நமது போர்முரசு கொட்டும் துடியனை பிறழ்ந்து நோக்கி தம்மை அலட்சியம் செய்துபோர் முகமாய் சிரிப்பாய் சிரிக்கும் இளைஞனை காண்!
மேலும் தொல்காப்பிய புறத்திணையியல் 63 ஆம் பாடல் உரைக்குறிப்பில்,
"வரு விசைப் புனலைக் கற்சிறை போல ஒருவன் தாங்கிய பெருமையானும்"
என்பதற்கு பொருள்: தன்படை நிலையாற்றாது பெயர்ந்தவழி விசையோடு வரும் பெருநீரைக் கல்லணை தாங்கனாற் போலத்தன் மேல்வரும் படையினைத்தானே தடுத்த பெருமையும் என்பதற்கு உதாரணமாக,
"கார்த்தரும் புள்ளனற் கண்ணஞசாக் காளைதன்
றார்ப்பற்றி யேர்தரு தோனோக்கித்- தார்ப்பின்னர்
ஞாட்பினுள் யானைக் கணநோக்கி யானைப்பின்
றோர்க்குழா நோக்கித்தன் மாநோக்கிக் - கூர்த்த
கணைவரவு நோக்கித்தன் வேனோக்கிப் பின்னைக்
கிணைவனை நோக்கி நகும்"
- புலவர் பொன்முடியார் (தகடூர் யாத்திரை)
என வரும் இது பொன்முடியார் ஆங்கவனைக்(பெரும்பாக்கன்) கண்டு கூறியது என்று தொல்காப்பிய உரையில் நாச்சினார்க்கினியர் குறிக்கின்றார்.
பெரும்பாக்கனைப் பற்றி பாடல்கூறும் பொன்முடியாரின் கருத்து:-
போர்க்களத்தில் பகைவனின் வேல்வீச்சுக்கு கண்சிமிட்டாத - கண் அஞ்சாத காளையாம் பெரும்பாக்கன் போர் யானையை நோக்கி யானைப்பின்னே இருக்கும் தேர்க்குழாம் படையை நோக்கி, தன்னுடைய போர்க்குதிரையை நோக்கி கூரிய எதிரியின் வேல் போர்க்களத்தில் எத்திக்கிலிருந்து தன்னை நோக்கி வரும் என நோக்கி, தன் கைவேலை நோக்கி பின் எதிர்க்கும் மன்னவனை நோக்கி சிரிக்கின்றான் துச்சமாக.
புறநானூற்றில் நமது புலவர் ஒளவையாரால் ஏற்றிப் போற்றி விண்ணளாவிப் புகழ்ந்து பெரும் புயலென வீரம் கொண்ட அதியமானை நமக்குக் காட்டப்படுகிறது. அப்படிப்பட்ட அதியமானின் இறுதிக் காலம் குற்றத்தன்மையுடையதாகி விட்டது. சேரமான் பெருஞ்சேரலிரும்பொறை படையெடுத்து வந்து இன்றைய அதியமான் கோட்டை முற்றுகையிட்ட நேரத்தில் பேராண்மைச் சிங்கமாக தகடூர் கோட்டையைவிட்டு வெளியே வந்து சேரமானை நேருக்கு நேர் போர்க்களத்தில் சந்தித்து போரிட்டு தகடூர் கோட்டையை காத்திருக்க வேண்டும், இல்லையென்றால் கோட்டை வெளிப்போரில் மாண்டிருக்க வேண்டும். அதுவே தகடூர் அதியமானின் மாண்புடைய வீர வாழ்வாக முடிந்திருக்க வேண்டும். அனால் இதற்கு மாறாக எதிரி படையோடு கோட்டைக்கு வெளியே வந்து தகடூர் கோட்டையை - நாட்டை கைப்பற்ற எக்காளமிட்டு கொக்கரித்து நிற்கும்போது எதிரியை போர்முகத்தில் சந்திக்காது, கோட்டையை விட்டு பேராண்மை சிங்கமாக ஒளி ஞாயிறன வெளியே வராமல் கோட்டைக்குள்ளே அதியமான் முடங்கிகிடந்தான் என்பது தகடூரின் மாபெரும் வீழ்ச்சியாகும். இது அதியனின் போர்க்குற்றத்தன்மையாகும்.
அதியமான் கோட்டை கோவில் (எ) சென்றாய சுவாமி
ஆனால் இரண்டாம் தகடூர்ப்போரில் மன்னன் பொகுட் டெழினிக்கும் சேரமான் பெருஞ்சேரலிரும்பொறைக்கும் நடந்த போரில் பொகுட் டெழினியின் போர்க்கள வீரதீரச்செயலை நாம் காண எந்த அகச்சான்றும் புறச்சான்றும் இல்லை, போரில் மாண்ட பொகுட் டெழினியின் அருமையை - பெருமையை எண்ணி எண்ணி சேரமானின் புலவர் அரிசில்கிழார் துக்கித்து இறங்கற்ப் பாடியுள்ளார் என்பது அறியக்கிடக்கிறது.
இரண்டாம் போரில் தகடூர் கோட்டையை விட்டு ஒளி ஞாயிறென - பேராண்மை சிங்கமாக - கோட்டையிடியென - சீறும் வரிப்புலியாய் - பாயும் தகடூர் வேங்கையாய் - பொகுட் டெழினியின் படை முதல்வன் பெரும்பாக்கன் மழவர் படையோடு புயலென வெளிக்கிளம்பி வந்து காவற்காட்டில் சேரமான் படையை எதிர் கொண்டான்; சேரமான் பெருஞ்சேரலிரும்பொறையை நேருக்கு நேர் தகடூர் கோட்டை வெளிப்போரில் சந்தித்தவன் பெரும்பாக்கன்.
இளைஞனாய் - களிற்று யானையையும் வீழ்த்தும் ஆற்றலுடையவனாய் வீரமாமுகத்தோடு சேரமானை ஒரு பொருளாக மதிக்காது துச்சமாக புன்னகை புரிந்தான். போர் முழக்கமிட்டான், அதியமானால் பொகுட் டெழினியால் , ஏற்பட்ட தகடூர் வீழ்ச்சிஎனும் பேரிருளில் ஓர் பேரொளியாய் படைமுதல்வன் பெரும்பாக்கன் களத்தில் சேரமானை எதிர்த்து போரிட்டான். தகடூர் தாயகத்திற்காக வீரமரணம் எய்தினான்.
தகடூர் போர்களில் களத்தில் சேரமானோடு உடன்வந்து போர்க்கள கட்சிகளை நேரில் கண்ட புலவர் ஆசிரியர் அர்சில்கிழாரும் புலவர் பொன்முடியாரும் தகடூர் கோட்டை அரண்சிறப்பையும் தகடூர் பெரும்பாக்கன் மற்றும் அவரது மழவர் படை விளைவித்த உலகமகா வீரத்தையும் கண்டு மெச்சி அவர்களை பற்றிப் பாடல்கள் புனைந்தனர். தகடூர் யாத்திரை பாடலில் தளபதி பெரும்பாக்கனைப் பற்றி பாடியவர்கள் அரிசில்கிழாரும் பொன்முடியாரும் ஆகும். ஆனால் சேர மரபினரின் வீரமாண்பை தெரிவிக்கும் புறப்பாடலான பதிற்றுப்பத்தில் புலவர் ஆசிரியர் அரிசில்கிழார் தகடூர் நாட்டின் வளத்தையும் தகடூர் நாட்டின் மழவர்களை -மறவர்களை - வெல்போர் ஆடவர்களை மட்டுமே குறித்துப்பாடல் புனைதுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
"வெல்போ ராடவர் மறம்புரிந்து காக்கும்
வில்பயி விறும்பிற் றகடூர் நூறி"
- அரிசில்கிழார் (பதிற்றுப்பத்து)
பதிற்றுப்பத்தில் "வெல் போராடவர் மறம்" நம்முள்ளத்தில் இரத்தத்தில் தகடூரின் வீரப்பேருனர்ச்சிக் கனலாய் எழுந்து விண்ணளாவி நிற்பதை நாம் உணர்கிறோம். தகடூரின் வெல்போராடவர்களை பெரும்பாக்கானே மாபெரும் தகடூரின் போர்சிங்கமானவான் என்பது வரலாறாகும். தகடூர் வெல்போராடவர்களை வழிநடத்தியவன் , தகடூர் கோட்டையை விட்டு அகழியைத் தாண்டி காவற்காட்டில் தன் படை மழவர்களோடு வெல்போராடவர்களோடு சேரமானை நேருக்கு நேர் சந்தித்த தகடூரின் பேராண்மை பெரும்பாக்கன் ஆவான்.
"அதோ கருந்தாடியுடைய அந்த அஞ்சா நெஞ்சன் தன் கையில் உள்ள வேலையும் நம்மையும் பார்த்து இறுமாப்புடன் சிரிக்கின்றான்"
- அரிசில்கிழார்.
'அந்த வீர இளைஞனால் வீறுமிக்க யானைகளைக்கூட வீழ்த்த முடியும் என்று தோன்றுகிறது".
- புலவர் பொன்முடியார்.
இதோடல்லாமல் வேறு சில புத்தங்களில் பெரும்பாக்கனை பற்றி புகழ்ந்துள்ளர்கள்.
தென்னாட்டு போர்கள் - பன்மொழி புலவர் க. அப்பா துரையார்
தருமபுரி வரலாறும் பிரகலாத சரித்திரமும் - ச. கிருஷ்ணமூர்த்தி
அதியமான் நெடுமான் அஞ்சி - ஜே. குலசேகரன் கவுண்டர்.
எரி அன்பு - தகடூரான் (எ) K.C. கிருஷ்ணன் கவுண்டர்
இந்த புத்தகங்களில் மேலும் விரிவாக மழவர் படைத் தலைவன் பெரும்பாக்கன் பற்றி அறியலாம்.
பாண்டியர்களின் படைத்தலைவன் - பழையன் மாறன்
சேரர்களின் படைத்தலைவன் - நன்னன், ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி, புன்றுறை
இவர்களை எல்லாம் ஒரு சேர எதிர்த்து போரிட்டு அழித்தான், தானும் போர்க்களத்தில் மாண்டான் மோகூர் பழையன்.
நன்னன் என்னும் மன்னனின் படைத்தலைவன் ஞிமிலியாவான், சேர படைத்தலைவன் கணையன் என்பவன் ஒருவன் இருந்தான். 12 ஆம் நூற்றாண்டு காலத்தில் ராஜராஜ சோழனோடு இலங்கை படையெடுப்பின் போது வீர வன்னிய படைத்தலைவர்கள் உடன் சென்று இலங்கையை வென்று கிழக்கு இலங்கையை தங்களின் வன்னிமைகளின் ஆட்சிபிரதேசமாக கொண்டார்கள். இலங்கையில் வெள்ளையரின் குடியேற்ற ஆட்சியாதிக்கதை எதிர்த்தவன் கடைசி இலங்கை தமிழ் மன்னன் குலசேகர வைரமுத்து என்னும் இயற்பெயர் கொண்ட பண்டார வன்னியன் ஆவான். இவர் வன்னியர் படைத்தலைவர்கள் மரபில் உதித்தவன் ஆவான்.
முதற் குலோத்தங்க சோழன் காலத்தில் ஒரிசா வடலிங்கம்வரை படையெடுத்துச் சென்று வாகை சூடியவன் ஆவான். உலகபுகழ் கலிங்கத்துப் பரணி கதாநாயகன் படைமுதல்வன் கருணாகர தொண்டைமான் ஆவான். இங்ஙனம் தமிழகத்தின் போர்ப்படைதலைவர்களின் வரலாற்றுக்கெல்லாம் அடிப்படையாகவும் எழுச்சியாகவும் இருப்பவன் தகடூர் நாட்டின் படைத்தலைவன் வன்னியமழவர் பெரும்பாக்கன் என்பது வரலாறாகும்.
- பெரும்பாக்கன்
பெரும்பாக்கன் பிறந்த ஊர்:-
அதகபாடி = அதிகமன்+பாடி.
அதகபாடி ஊராட்சி தலைமியிடம். இந்த ஊராட்சியின் தலைவராக இருந்தவர் “பெரியமாக்கன்”. இவருடைய பெயர் தகடூர் அதியமான் அஞ்சியின் மகன் பொகுட்டெழினி ஆட்சிக்காலத்து படை முதல்வனும், 2-ஆம் தகடூர் போரில் சேரமான் பெருஞ்சேரலிரும்பொறையை அதியமான் கோட்டை முன் காவற்காட்டில் நேருக்குநேர் எதிர்த்த மழவர் தடூர் சிங்கம் பெரியமாக்கன் பெயரே ஆகும்.
தகடூர் படைமுதல்வன் பெரும்மாக்கன் பிறந்த பழங்கால ஊரே அதகபாடி. பெரும்மாக்கன் வம்சாவளியிர் இன்று பெயர் மருவி “பெரிய மாக்கன் வீட்டார்” என்று அழைக்கின்றனர். மேலும் அதியமான் பாடி கிராமத்தில் பெரியமாக்கன் வம்சாவளியை – பரம்பரையை “மாக்கம் வீட்டார்’ என்று மரபு வழியாக அழைக்கபடுகிறது.
பெரிய மாக்கன் வீட்டாரில் பிறக்கும் முதல் ஆண் குழந்தைக்கு பெரிய மாக்கன் என்றும் முறையே இரண்டாவது குழைந்தைக்கு சின்ன மாக்கன் என்றும், பெண் குழந்தைகளுக்கு மாக்கி என்றும் பெயர் சூட்டுவது வழக்கமாக இருந்து வருகிறது. பெரிய மாக்க வீட்டாரே பழங்காலத் தகடூரின் படைத்தலைவன் பெரும்மாக்கன் பிறந்த வீடாகும்.
தருமபுரி மாவட்டத்தில் பெரும்பாக்கன் பெயரில் உள்ள ஊர்கள்:-
மாக்கனூர்:-
பெரியமாக்கன் குடும்பத்திற்கு அதிகமான உறவுமுறைகள் இருப்பது இந்த "மாக்கனூர்" கிராமம் (மழவர்கள்) என்பது குறிப்பிடத்தக்கது.
01.09.2015 - ல் வந்த தினமலர் நாளிதழில் மாக்கனூர் கிராமத்தின் வரலாற்றை தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்.
பெயர் காரணம்:-
தகடூரை மண்ணை அப்போதைய மன்னன் அதியமான் ஆண்டபோது இம்மன்னனின் படையில் தளபதியாக இருந்தவர் பெருமாக்கன் இவர் இப்பகுதியில் தங்கியிருந்தார். இவர் பெயர் தான் நாளடைவில் மருவி மாக்கான் என்று அழைத்தும் பின் அது காலப்போக்கில் "மாக்கன் ஊர்" , மாக்கனூர் என்றழைக்கப்படுகிறது.
மேலும் சில தகவல்: https://www.facebook.com/darumapurimavattam/photos/a.632754576753082.1073741828.631117923583414/806844749344063/?type=1&theater
மேலும் இந்த கிராமத்தில் வீட்டுக்கொரு ஆசிரியர் உள்ளனர். தருமபுரி மாவட்டத்திலேயே "ஆசிரியர் கிராமம்" என்றழைக்கப்படுவது இந்த கிராமமே. திண்ணைப்பள்ளி முதல் நடுநிலைப்பள்ளி வரை என்ற தலைப்பில் கட்டுரை வந்துள்ளது அதை கீழே காண்க.!
Click Here: http://www.newindianexpress.com/states/tamil_nadu/With-100-Literacy-Makkanoor-Village-has-Teacher-in-Every-Home/2013/12/12/article1941158.ece
மேலும் சுமார் 1000 ஆண்டுகாளாக கடைபிடித்து வரும் ஊர் கவுண்டர், மந்திரி கவுண்டர் மற்றும் கோல்கார கவுண்டர் என நிர்வகிக்கும் முறையை இன்றும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர்.
Click Here: http://www.frontline.in/static/html/fl2811/stories/20110603281109500.htm
பாடி:-
அதகபாடி மற்றும் மாக்கனூர் கிராமத்தை தொடர்ந்து, அதியமான் படைமுதல்வன் பெரியமாக்கனின் அண்ணன், தம்பிகளும் மற்றும் சம்பந்திகளும் வாழும் கிராமம் தான் "பாடி".
மாபெரும் பெருந்தலைவர் குட்டிக்கவுண்டர் பிறந்த ஊர். இந்த ஊர் அதியமானின் மழவர் போர்ப்படையினர் தங்கியிருந்த ஊர். இந்த கிராமமும் அதிகமான்பாடி வீடுகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குட்டிக் கவுண்டரின் பேரன் தான் தருமபுரி மாவட்ட வன்னியர் சங்க தலைவரும் பாமக துணைத்தலைவருமான பாடி. செல்வம் ஆகும்.
திரு. பாடி செல்வம்.
மாக்கன் கொட்டாய்:-
பாலக்கோடு ஜெர்தலாவ் ஊராட்சிக்கு உட்பட்ட "மாக்கன் கொட்டாய்" என்ற ஊர் உள்ளது. இது போலவே இதே தாலுகாவில் சீரியன அள்ளிக்கு அருகேயும் மாக்கன் கொட்டாய் (எ) சீராண்ட புரம் என்ற ஊர் உள்ளது.
*************************************************************************
குறுந்தொகையில் புலவர் பெரும்பாக்கனார்:-
சங்ககாலத் தமிழ் புலவர்களில் பெரும்பாக்கனார் என்னும் புலவர் ஒருவர் இருந்தார். இவர் பெரும்பாக்கன் என்னும் ஊரை சேர்ந்தவராக இருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். பெரும்பாக்கன் என்ற பெயரில் ஊர்கள் தமிழகத்தில் இருக்கின்றன. செங்கல்பட்டு மாவட்டத்தில் "பெரும்பாக்கச்சீமை" என்பது ஒரு நாட்டுப்பகுதியாகும்.
"அம்ம வாழி தோழி புன்னை
அலங்குசினை யிருந்த அஞ்சிறை நாரை
உறுகழிச் சிறுமீன் முனையிற் செறுவிற்
கள்நாறு நெய்தல் கதிரோடு நயக்கும்
தண்ணத் துறைவற் காணின் முன்னின்று
கடிய கழறல் ஒம்புமதி தொடியோள்
இன்ன ளாகத் துறத்தல்
நும்மின் தகுமோ என்றனை துணிந்தே".
- புலவர் பெரும்பாக்கனார் (குறுந்தொகை - 296)
இப்பாடலை பாடிய புலவர் எங்கு வாழ்ந்தார் என்று தெரியவில்லை. அனால் மழவர் படைத்தலைவர் பெரும்பாக்கன் இல்லை. இவர்கள் இருவருமே வாழ்ந்துள்ளார்கள் என்று தெரிய வருகிறது.
*******************************XXXX*************************************